திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் நாளை (பிப்ரவரி:04)போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில் மதுரை மாநகரின் வெளிநபர்கள் நபர்கள் உள்ளே வராத வகையில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்ணீட அறிக்கையில் வரும் 4-ம் தேதி இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அதற்கு தென்மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ள உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து உள்ளனர் இதனிடையே இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களை சார்ந்தோர் திருப்பரங்குன்றம் மலை குறித்து தங்கள் கோரிக்கையை பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர் இதனால் இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் இடையே பதட்டமான சூழல் உருவாக வாய்ப்புள்ளதால்
மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் வெளி நபர்கள் வராத வகையில் 3-2-2025 காலை 6 பணி முதல் 4-2-2025 இரவு 12 மணி வரை 2 நாட்கள் மட்டும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தில் பொது அமைதியை பாதுக்காக்கும் பொருட்டு, மனித வாழ்வு, பொது பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டும் போராட்டங்கள் கூட்டங்கள் மற்றும் தர்ணாக்கள் போன்றவற்றிற்கு 163 BNSS (144 CrPC) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை பழங்காநத்தத்தில் இன்று மாலை 5-6 மணிக்கு இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட்டு மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மதம் மற்றும் தனி நபர்களை விமர்சித்தோ, பிரச்னை ஏற்படும் வகையிலோ ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பக்கூடாது என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்றும் பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது ஒரு மைக்கிற்கு மேல் பயன்படுத்தக் கூடாது கட்சிக் கொடிகள் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை என்றாலும் அது அரசமைப்புக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக இந்து முன்னணி போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளநிலையில் கோவிலுக்குள் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் "வெற்றிவேல் வீரவேல்" என முழக்கமிட்டு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
0 கருத்துகள்