மதுரை மாவட்டம் குலமங்கலம் அருகே பூதகுடியில் அருந்ததியர் மக்களுக்கு நீண்ட காலமாக சுடுகாட்டுக்கு கூட பாதை இல்லாமல் வயல் நடுவில் உள்ள வரப்புகளில் இறந்த உடலை கொண்டு செல்லும் அவல நிலை தொடர்கிறது
மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அரசு அதிகாரிகள்
மெத்தன போக்கில் இதையும் கடந்து போவார்களா.
இது போன்ற அவலங்களை இத்தனை ஆண்டுகள் கடந்தும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் சுடுகாடு வழி கிடைக்க எந்த திர்வும் எட்டாதநிலை வியப்பாகவும் உள்ளது.
பட்டியலின மக்களை ஆண்டாண்டு காலமாக தி.மு.க அரசாக இருந்தாலும் அ.தி.மு.க. அரசாக இருந்தாலும் சரி பட்டியலின மக்களை வஞ்சிப்பது தொடர் கதைதான்.
2000 வருட சாதிய தீண்டாமை இன்று வரை நடைமுறையில் உள்ளது...!
0 கருத்துகள்